Web Analytics Made Easy -
StatCounter

பருவதமலையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை!

தமிழ்நாடு வனத்துறை, திருவண்ணாமலையில் வனக்கோட்டம் பகுதியில், கலசபாக்கம் தாலூக்காவில் உள்ள புதுப்பாளையம் வனசரகத்திற்குட்பட்ட பருவதமலையின் உச்சியில் அருள்மிகு பிரமராம்பிகை சமேத மல்லிகார்ஜுனர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு பௌர்ணமி தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் விட்டுச் செல்லும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற பல்வேறு தன்னார்வலர்கள் குழுக்கள் மூலம் மாதந்தோறும் குப்பைகளை வனதுறை சார்பில் அகற்றி வருகின்றனர். நெகிழிப்பைகளை எடுத்து செல்வதைத் தடுக்கும் விதமாக இன்று பவுர்ணமியை முன்னிட்டு அன்பு சூழ் உலகு அறக்கட்டளை சார்பில் சுமார் 1500 துணிப்பைகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. அவர்கள் எடுத்து வந்த நெகிழிப்பைகள் அகற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் புதுப்பாளையம் வனசரகர் திரு.சுரேஷ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துணிப் பைகளை வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் வனத்துறையின் பல்வேறு அதிகாரிகள் மற்றும் பருவதமலை பாதுகாப்புக்குழு, NGC, அறம் அறக்கட்டளை, ஆகியோர் இணைந்து சிறப்பாக செயல்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *