Web Analytics Made Easy -
StatCounter

தேர்வு அறிவிப்புகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்!!

குரூப்-1, குரூப்-2, குரூப்-2A, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

சென்னைபீச் முதல் திருவண்ணாமலை வரை புதிய இரயில் இயக்கம்!!

புதிய இரயில் மே 2 முதல் சென்னைபீச் முதல் திருவண்ணாமலை வரை தினசரி இரயிலாக ஓடும்- இரயில்வே துறை அறிக்கை

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் இன்று முதல் விடுமுறை தொடங்குகிறது.

மிதமான மழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை மையம்

தென் தமிழகம், வட தமிழக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று (ஏப்.24) மிதமான மழைக்கு வாய்ப்பு. தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளை லேசான மழை பெய்யக்கூடும்-சென்னை வானிலை மையம்.

அய்யங்குளத்தில் பெரிய நாயகர் பராசக்தி அம்மன் எழுந்தருள தீர்த்தவாரி நடைபெற்றது!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் 10-ம் நாள் பெரியநாயக்கர் பராசக்தி அம்மன் அய்யங்குளத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்…பக்தர்கள் பரவசம்!

சித்ரா பவுர்ணமி நாளில் ஆழ்வார்புரம் வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு இன்று அதிகாலை நடைபெற்றது. முன்னதாக ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 6 மணியளவில் தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் – Day 9

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (22.04.2024) ஞாயிற்றுக்கிழமை ஒன்பதாம் நாள் மகிழமரம் முன்பு பொம்மை பூ கொட்டும் விழா கோலாகலமாக நடைபெற்றது.

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தள்ளி வைக்கப்பட்ட தேர்வுகள் மீண்டும் தொடங்கியது!!

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் பள்ளிகளில் இன்று (22.04.2024) அறிவியல் தேர்வு நாளை சமூக அறிவியல் தேர்வு நடைபெறுகிறது.

அன்னதானம் வழங்குவர்களுக்கான அனுமதி ஆணையினை இன்று (22.04.2024) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சித்ரா பௌர்ணமி – 2024 முன்னிட்டு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் அன்னதானம் வழங்குபவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு…

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு இன்று திருவண்ணாமலையிலிருந்து 1467 பேருந்துகள் இயக்கம். கிளாம்பக்கத்திலிருந்து இன்று முதல் 527 பேருந்துகளும், நாளை 628 பேருந்துகளும்,மேலும் சென்னை மாதவரத்தில் இருந்து இன்று 30 பேருந்துகளும், நாளை கூடுதலாக 26…

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் விவரங்கள்!

ஆரணி மக்களவைத் தொகுதியில் சட்டமன்றம் வாரியாக பதிவான வாக்குகள் விவரங்கள்: சட்டமன்றம் மொத்தம் பதிவானது சதவீதம் ஆரணி 2,78,313 2,06,771 74.29 செய்யாறு 2,60,667 2,04,780 78.56 வந்தவாசி (தனி) 2,44,930 1,73,619 70.89…

திருவண்ணாமலையில் சித்திரை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் சித்திரை மாதப் பெளா்ணமி கிரிவலம் செவ்வாய்கிழமை (ஏப்ரல் – 23) அதிகாலை 03:25 மணிக்கு தொடங்கி புதன்கிழமை (ஏப்ரல் – 24) மதியம் 05:18 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம்…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் நான்காம் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (17.04.2024) வெள்ளிக்கிழமை நான்காம் நாள் பன்னீர் மண்டபம் எழுந்தருள பொம்மை மலர் துாவும் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.