Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நாளை விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நாளை (17-06-2022) வெள்ளிக்கிழமை காலை 10:30 மணி அளவில் கலெக்டர் தலைமையில் நேரடியாக நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேளாண்மை துறை மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளான தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்பு துறை, வருவாய்த்துறை, வங்கியாளர்கள், கூட்டுறவு மற்றும் பிற சார்பு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர்.

எனவே விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தும் தனிநபர் குறைகள் குறித்த மனுக்கள் அளித்தும் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் திரு.முருகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *