Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் நூலகத்தில் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவும் கைத்தறி நெசவாளர் தினத்தையும் கொண்டாட முடிவு!

ஆகஸ்ட் ஏழு நெசவாளர் தினம் ....இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 7 நெசவாளர் தினமாக கொண்டாட மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அதன்படி கலசபாக்கம் வட்டத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி கலசபாக்கம் நூலகத்தில் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவும் கைத்தறி நெசவாளர் தினத்தையும் கொண்டாட முடிவு செய்துள்ளது. குழந்தைகளுக்கு சுதந்திரத்தை பற்றியும் நெசவு குறித்தும் குடிசை தொழில்கள் குறித்தும் கலந்துரையாடலில் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.

சிறந்த நெசவாளருக்கு மரியாதை செய்ய உள்ளது. கிராமத்தில் உள்ள மக்களுக்கு நெசவும் வேளாண்மையும் மட்டுமே பிரதான பிரதானமான தொழிலாக உள்ளது. இது அமைதியையும் வேலை வாய்ப்பை வழங்குகிறது. குறைவான கல்வியற்ற பெண்களுக்கும் வயதானவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு தரும் குடிசைத் தொழில்களை ஆதரிப்போம் காந்தியை கொண்டாடுவோம்.ஆக.14. சுதந்திர தின விழாவில் குழந்தைகளும் பொதுமக்களும் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

திரு. ராஜேந்திரன்.
பாரம்பரிய விதைகள் மையம் .கலசபாக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *