Web Analytics Made Easy -
StatCounter

கலசப்பாக்கம் அடுத்த பருவதமலை கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு!

கலசப்பாக்கம் அடுத்த தென்மாதிமங்கலத்தில் அமைந்துள்ள சுமார் 4,560 அடி உயரமுள்ள பருவதமலை மீது சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலாம்பிகை சமேத மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில் உள்ளது. ஐப்பசி மாத பிறப்பையொட்டி நேற்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பாலாம்பிகை தாயார் மற்றும் மல்லிகார்ஜுனேஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நேற்று பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *