Web Analytics Made Easy -
StatCounter

ரதசப்தமி: அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தவாரிக்கு புறப்பட்ட சந்திரசேகரர்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை முதல் பங்குனி வரையிலான 12 மாதங்களில் நடக்கும் முக்கிய தீர்த்தவாரிகளில் தை மாதம் அமாவாசை முடிந்து 7-ம் நாள் நடக்கும் ரதசப்தமி தீர்த்தவாரியும் ஒன்று.

இந்த தீர்த்தவாரி புனித நாளில் உற்சவர் சந்திரசேகரர் அம்பாளுடன் இன்று அதிகாலை 5 மணியளவில் கோவிலில் இருந்து புறப்பட்டு கலசபாக்கம் செய்யாற்றுக்கு சென்றார்.

முன்னதாக தனகோட்டிபுரம் கோவிலுக்கு சொந்தமான வயலுக்கு சென்று அங்குள்ள விளைநிலங்களை பார்வையிட்டார். அப்போது அங்கு அறுவடை செய்யப்பட்ட நெல்லில் பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.

இதையொட்டி சுவாமி- அம்பாள் செல்லும் வழிகளில் பக்தர்கள் திரண்டு வழிபட்டனர். தொடர்ந்து மேல செய்யாற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *