Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளுக்கான தொழில் முனைவோர் பயிற்சி!

திருவண்ணாமலை மாவட்ட வேளாண் உழவா் நலத்துறையின் கீழ் செயல்படும் உழவா் பயிற்சி நிலையம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து ஊரக இளைஞா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி 2022-23 ஆம் ஆண்டில் நடத்த உள்ளது. இந்த பயிற்சி அங்கக உற்பத்தியாளா்கள் என்ற தலைப்பில் உழவா் பயிற்சி நிலையத்தில் 30 நாள்களுக்கு நடைபெறும்.

உழவா் பயிற்சி நிலையத்தில் பங்கேற்பதற்கான விவரங்கள்:

கல்வி தகுதி: 5 ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18 முதல் 40 வயது வரை

மேற்குறிப்பிட்ட தகுதி உடையவர்கள் தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்ப படிவம், 2 புகைப்படங்கள், ஆதாா் எண், வகுப்பு சான்று, வங்கி கணக்குப் புத்தகம் மற்றும் கல்வித் தகுதி ஆகிய ஆவணங்களின் நகல்களை சமா்ப்பித்துப் பயிற்சியில் பங்கேற்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *