Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை கோயிலில் ராஜகோபுரம் முன்பு இன்று காலை பந்தக்கால் நடப்பட்டது

அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் 2021 தீபத்திருவிற்கான பந்தகால் நடும் விழா இன்று (16.09.2021) அதிகாலை ராஜகோபுரம் முன் நடைபெற்றது. முன்னதாக திருக்கோவில் மூன்றாம் பிரகாரம் அருள்மிகு சம்பந்த விநாயகர் சன்னதியில் பந்தகாலுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாரதனை நடைபெற்றது. திருக்கோயில் இணை ஆணையர் பந்தகால் எடுத்து தர, பிச்சகர் ரகு அவர்கள் பெற்று சுமந்து வர, மகாரதங்களுக்கு தீபாரதனைக்கு பின் பந்தகால் நடப்பட்டது. காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

Posted on: [wpdts-custom start=”post-created” format=”j.n.Y G:i”]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *