Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 16) தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும்.

இந்த சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் 15-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான தகுதிகள் கொண்ட 300-க்கும் மேற்பட்ட நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

கல்வித்தகுதி:-
8,10,12, பட்டம், முதுநிலைப் பட்டம், பொறியியல், ஐடிஐ, பாலிடெக்னிக் தேர்ச்சி பெற்றவர்கள்.

தொடர்புக்கு:-
04175-233381
என்ற வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் திரு.பா.முருகேஷ் அவர்கள் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *