Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அருகே மாதாந்திர இயற்கை விவசாயிகள் கலந்துரையாடல்!

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த விண்ணுவாம்பட்டு ஏரிக்கரை காளியம்மன் கோவில் அருகே, இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம் ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதி அன்று நடைபெறும். அந்த வகையில், மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் கலந்து கொண்ட இயற்கை விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

விவசாயிகள் தங்கள் இயற்கை முறையில் பயிர் செய்த கீரை வகைகள், காய்கறிகள், அரிசி வகைகள், போன்றவைகளை சந்தைப்படுத்தினார்கள். பொதுமக்கள் ஆர்வமுடன், இராசயனம் கலக்காத பொருட்களை வாங்கிச் சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகள், பொதுமக்களுக்கு, ஆவாரம்பூ டீ. இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்சியில், பாரம்பரிய விதைகள் மையம், மீனாட்சி சுந்தரம்,ராஜேந்திரன், லெனின் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *