Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தைகள் தின விழா!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தின விழாவினையொட்டி சைல்டுலைன் 1093, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் மாவட்ட சமூகநலத்துறை இணைந்து குழந்தைகள் நண்பன் பட்டையை (சி. தோஸ்தி) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா. முருகேஷ், அவர்களுக்கு அணிவித்து குழந்தைகளுடன் நேற்று (14. 11. 2018) குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் காணிப்பாளர் மரு. வி. கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் மரு. மு. பிரியதர்ஷினி, கூடுதல் ஆச்சியர் (வளர்ச்சி) திரு. வீர். பிரதாப் சிங், செய்யார் சார் ஆட்சியர் செல்வி ஆர். அனாமிகா, உதவி ஆச்சியர் (பயிற்சி) செல்வி. ரஷ்மி ராணி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி. செல்வி, துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *