Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்ட வனத்துறை சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மற்றும் துண்டு பிரச்சாரம்!

கலசபாக்கம் அடுத்த பருவதமலையில் வறட்சி காலங்களில் காடுகளில் அவ்வப்போது காட்டுத் தீ ஏற்படுவது வழக்கம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்மாதிமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவண்ணாமலை மாவட்ட வனத்துறை சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மற்றும் துண்டு பிரச்சாரம் வழங்குதல் இருசக்கர வாகன பேரணி ஆகியவை நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட உதவி வன அலுவலர் திரு.வினோத்ராஜ், புதுப்பாளையம் வன சரக அலுவலர் திரு.சுரேஷ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் திரு.பன்னீர் திரு.எழில் மாறன் ஒன்றிய கவுன்சிலர் திரு.துரை ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக மாதிமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் வனம் தொடர்பான கட்டுரை, பேச்சு, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டது இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் பர்வதமலை பாதுகாப்பு குழு மற்றும் பல்வேறு தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து பர்வதமலை சுற்றியுள்ள கிராமங்களில் சென்று துண்டு பிரசுரங்கள் விநியோகித்து காட்டுத் தீ ஏற்படாத வகையில் அவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரமும் ஆங்காங்கே நடத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *