Web Analytics Made Easy -
StatCounter

25 ஆண்டுகளுக்கு பின்னர் நிரம்பிய காரப்பட்டு ஏரி பொதுமக்கள் சிறப்பு வழிபாடு!

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட காரப்பட்டு பெரிய ஏரியானது 25 ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டாவது முறையாக நிரம்பி வழிகிறது. மேலும் காரப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி சீனிவாசன் என்கிற லட்சுமணன் தலைமையில் காரப்பட்டு கவுன்சிலர் வழக்கறிஞர் ரமேஷ் முன்னிலையில் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்து மதகு வழியாக நிரம்பி வழியும் தண்ணீர் அருகே சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

மேலும் காரப்பட்டு ஊர் பொதுமக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் மதகின் வழியாக பட்டுப் புடவையை தண்ணீரில் விட்டு சிறப்பு வழிபாடு செய்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி பொங்கல் வைத்து மகிழ்ச்சியாக கொண்டாடினர். மேலும் இந்நிகழ்ச்சியில் காரப்பட்டு ஊராட்சி செயலாளர் அருணகிரி உட்பட ஊர் பொதுமக்களும், முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *