Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அடுத்த மிருகண்டா அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் திறப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள மிருகண்டா அணையின் மொத்த நீர்மட்டம் 22.98 அடி உள்ளது. இதில் தற்போது 100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

இது பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாகவும் பாதுகாப்பு கருதியும் தண்ணீர் குறைவாக உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் பங்கீட்டு பணி நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகளின் உத்தரவுபடி நடக்கிறது.

தற்போது சிறுவள்ளூர் ஏரிக்கு கோடி விழுந்தது, மேலும் எர்ணாமங்கலம் ஏரிக்கு தண்ணீர் செல்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *