Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அடுத்த காப்பலூர் ஈச்சங்காடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநயாகர், ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக பெருவிழா!

கலசபாக்கம் அடுத்த காப்பலூர் ஊராட்சி, மதுரா ஈச்சங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயிலில் நேற்று (12.09.2022) மஹா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் யாகசாலை அமைத்து பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இவ்விழாவில் கலசபாக்கம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *