Web Analytics Made Easy -
StatCounter

ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 58 ஆம் ஆண்டு சித்ராபௌர்ணமி பெருவிழா அழைப்பிதழ்!

நிகழும் சார்வரி ஆண்டு சித்திரை 3 ஆம் நாள் (16-04-2022) சனிக்கிழமை பூண்டி மகான் ஆசிரமத்தில் 58 ஆம் ஆண்டு சித்ராபௌர்ணமி பெருவிழா மிக சிறப்பாக நடைபெறவுள்ளது. ஸ்ரீலஸ்ரீ சற்குருநாதர் ஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளுக்கு பூர்ண அபிஷேகமும், மகா ஆராதனையும் வெகு சிறப்பாக நடைபெறும்.

நிகழ்ச்சி நிரல் :

காலை 5.30 மணிக்கு : நடை திறப்பு, மங்கள இசை வாத்தியம்
காலை 8.00 மணி முதல் : பக்தர்களுக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.
காலை 8.30 மணிக்கு : கொடியேற்றம் அதைத்தொடர்ந்து ஸ்ரீ மகாகணபதி வேள்வி
காலை 10.00 மணிக்கு : மண்டபத்திலிருந்து - ஸ்ரீ சற்குருநாதரின் பதாகை, பொற்கிரீடம், புனித தீர்த்தம், அபிஷேக பொருள்கள் மற்றும் 101 பால்குடம், பஜனை ஊர்வலத்துடன் மகான் சன்னிதானம் வந்தடைதல்.
நண்பகல் 12 மணிக்கு மேல் : மகா ஆராதனை மற்றும் மகேஸ்வர பூஜை நடைபெறும்.
பகல் 1 மணிக்கு மேல் : ஆன்மீக சொற்பொழிவும், பக்தி பாடல்களும் இனிதே நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *