எலத்தூர்
சப்த கரை கண்ட தலங்களில் ஐந்தாவது தலம். இது போளூரில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டு, விஜயநகர மன்னர்களால் விரிவாக்கம் செய்யப்பட்ட திருக்கோவில் இதுவாகும். இங்குள்ள இறைவனின் திருநாமமும் "கரைகண்டீஸ்வரர்" என்பது தான். இத்தல இறைவனின் உருவம், சிறிய பாணமாக காட்சி தருகிறது.