Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 75 பேருக்கு பணி நியமனம்!

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையமும் இணைந்து தனியார் துறை சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடத்தின.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமில் வங்கிகள், தனியார் நிறுவனங்கள் என மொத்தம் 16 முன்னணி நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களின் பணிகளுக்கேற்ற தகுதிகள் கொண்ட இளைஞர்களைத் தேர்வு செய்தனர்.

முகாமில் பல்வேறு கல்வி தகுதி கொண்ட 148 பேர் கலந்து கொண்டனர். இதில் 75 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் த. மோகன்ராஜ் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *